காதல் என்பது அற்புதமான உணர்வு!
காதல் என்பது அற்புதமான உணர்வு. ஆனந்தமான வாழ்க்கைக்குக் காதல்தான் அடிப்படை.
தத்துவங்களையும் தர்க்கங்களையும் சளைக்காமல் பேசுபவர்களிடம் காதல் போன்ற மென்மையான உணர்வைச்சொட்டும் இதயம் இருப்பதில்லை. மனதிற்குப் பதிலாக மூளைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர்கள்தான் தத்துவவாதிகள்.
நமக்குள் இருக்கும் ஈகோவை அடக்கியாள மிகச்சிறந்த வழி காதல்தான் உணர்வுப்பூர்வமாக ஒன்றிவிட்ட இரண்டு காதலர்களிடையே நீ முக்கியமா நான் முக்கியமா என்ற கேள்வியே பிறப்பதில்லை.
இருட்டான அறையொன்றில் இரண்டு மெழுகுவர்த்திகளை ஏற்றிவைக்கிறோம். கிடைக்கும்வெளிச்சத்தை இந்த மெழுகுவர்த்தியிலிருந்து இவ்வளவு ஒளி, அந்த மெழுகுவர்த்தியிலிருந்து இவ்வளவு ஒளி என்று தனித்தனியாக பிரித்து அளந்து பார்க்க இயலாது.
காதல் என்பதும் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றுதான் என்றாலும் தங்கள் தனித்துவத்தை காத்து நிற்பது.
உண்மையான காதலர்கள் தங்கள் தனித்துவத்தைப் போரடிக் காக்க மாட்டார்கள். விட்டுக்கொடுப்பதின் மூலமே தங்களின் தனித்துவத்தை காத்து நிற்பார்கள்.
காதல் என்கிற அற்புதமான உணர்வை காமம் என்கிற உணர்ச்சியோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள். காமம் என்பது காதலின் ஒர் அம்சம் மட்டுமே. காமம் என்பது உடல் சார்ந்த உணர்வு மட்டுமே.
காதல் உணர்வில் தம்மை மறந்து மற்றவர்களைப் போற்றுகின்றோம். காமத்தில் மாற்றவர்களை மறந்து நம்மை மட்டுமே முக்கியமாகக் கருதுகிறோம். காமம் என்பது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வதுதான். இதனால்தான் காமத்தினால் மட்டுமே கவரப்பட்ட இரண்டு உயிர்களிடையே எந்த விதமான் அன்னியோன்யமும் இருப்பதில்லை. எனவேதான் அவர்கள் எளிதில் பிரிந்து விடுகிறார்கள்.